12th Advanced Tamil question paper | 12ஆம் வகுப்பு - சிறப்புத் தமிழ் வினாத்தாள் |
12-ஆம் வகுப்பு - சிறப்புத் தமிழ் (Advanced Tamil)
இயல் 1 & 2 வினாத்தாள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
1. சரியான தொடரைக் கண்டறிக.
2. இலக்கிய உருவாக்கத்தை இதன் வழியாக அரிஸ்டாட்டில் விளக்குகிறார்:
3. சரியான கூற்றைக் காண்க.
- 1. படைப்பாளன் கருத்துகளை உணர்ச்சிகளோடு வெளிப்படுத்தும் வடிவம் கவிதை.
- 2. பேசுபவர், எதிர் வினையாற்றுபருக்கான உரையாடல் வடிவம் நாடகம்.
- 3. படைப்பாளரே அனைத்துப் பாத்திரங்களையும் இயங்கச் செய்யும் வடிவம் கதை.
- 4. படைப்பாளன் தன்கருத்துகளை முன்னிலைப்படுத்தி எழுதும் வடிவம் கட்டுரை.
4. தமிழின் செவ்வியல் தன்மைக்குச் சான்றாக விளங்குபவை:
5. பழந்தமிழர்:
- 1. திருமணத்திற்கு முந்தைய காதல் வாழ்வைக் கற்பொழுக்கம் என்றனர்.
- 2. திருமணத்திற்கு முந்தைய காதல் வாழ்வைக் களவொழுக்கம் என்றனர்.
- 3. திருமணத்திற்குப் பிறகான இல்லற வாழ்வைக் கற்பொழுக்கம் என்றனர்.
- 4. திருமணத்திற்குப் பிறகான இல்லற வாழ்வைக் களவொழுக்கம் என்றனர்.
6. கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றுகளில் சரியான கூற்றுகளைக் கண்டறிக.
- 1) மனிதன் தனக்கென வரையறுத்துக் கொண்ட ஒழுக்க முறைகளின் தொகுதியே அறம்.
- 2) சான்றோர் விலக்கியன ஒழித்தல் அறம்.
- 3) தீமையை நீக்குவது அல்லது அறுப்பது அறம்.
- 4) சான்றோர் விதித்தன செய்தல் அறம்.
7. உவகை என்ற மெய்ப்பாடு தோன்றுவதற்குரிய களமாகத் தொல்காப்பியர் கூறுவது:
8. தம் மன்னன் மறைவிற்காகக் குடிமக்கள் வருந்திப்பாடுவதாக அமைந்த துறை:
9. 'தாமிருந்த கோடு குறைத்து விடல்' - இப்பழமொழியின் பொருள்:
10. பொருந்தாத இணையக்கண்டறிக:
11. கூற்று : குடிமக்கள் காப்பியம் என்று சிலப்பதிகாரம் அழைக்கப்படுகிறது.
காரணம் : குடிமக்கள் ஆட்சியை இக்காப்பியம் வலியுறுத்துகிறது.
காரணம் : குடிமக்கள் ஆட்சியை இக்காப்பியம் வலியுறுத்துகிறது.
12. பன்னிரு திருமுறைகளை ______ நாயன்மார் பாடியுள்ளனர்.
13. பொருத்துக:
| 1. சம்பந்தர் | அ) தோழமை நெறி |
| 2. குலசேகராழ்வார் | ஆ) பிள்ளைமை நெறி |
| 3. சுந்தரர் | இ) அடிமை நெறி |
| 4. திருமங்கையாழ்வார் | ஈ) நாயகன் நாயகி நெறி |
14. சொற்றொடர்நிலை என்பது:
15. திருக்காவலூர்க் கலம்பகத்தை இயற்றியவர்:
II. குறுவினா
- முதற்பொருள் என்பவை யாவை?
- அரிஸ்டாட்டில் வரையறை செய்யும் மூவோர்மைகள் எவை?
- கையறுநிலை என்பது யாது?
- பழந்தமிழர் வாணிகத்தை எவ்வாறு வகைப்படுத்தினர்?
- கூடாவொழுக்கம் என்றால் என்ன?
- சிறுபஞ்சமூலம் குறிப்பிடும் மூலிகைகள் யாவை?
- மணிமொழிக்கோவை என்பதில் அமைந்த நூல்கள் யாவை?
- காப்பியத்தின் பெரும்பிரிவும் உட்பிரிவும் எவ்வாறு பெயரிடப்பட்டன?
- முக்குற்றங்கள் எனப் பௌத்தம் குறிப்பிடுவன யாவை?
- சிற்றிலக்கியங்களின் வகைகளுள் எவையேனும் நான்கினை எழுதுக.
III. சிறுவினா
- தொல்காப்பியர் குறிப்பிடும் உரிப்பொருள்கள் ஏழனைக் குறிப்பிடுக.
- ஓரையாடுதல் - குறிப்பு வரைக.
- அன்றாட செயல்களை எவ்வாறு தொடங்கவேண்டும் என ஆசாரக்கோவைப் பாடல் கூறுகிறது?
- ஒழுக்கமுடையோரும் இல்லாதாரும் எய்தும் நிலையாக விவேகசிந்தாமணி கூறுவன யாவை?
- கலம்பகம் - சிறு குறிப்பு தருக.
IV. நெடுவினா
- தமிழ்க்கவிதையின் போக்குகள் குறித்து விவரி.
- சங்ககால வணிகம் சிறந்திருந்தது என்பதை பட்டினப்பாலை வழி நின்று விளக்குக.
- 'புறப்புண் நாணி வடக்கிருந்தோனே' - இடஞ்சுட்டி விளக்குக.
- நபிகள் நாயகத்தின் பெருமையை உமறுப்புலவர் எவ்வாறு விளக்குகிறார்?
- இரட்சகர் எனப்போற்றப்படுபவர் யார்? இரட்சணிய யாத்திரிக வழிநின்று எழுதுக.