அடுத்த பழமொழிகள் | adutha Tamil Proverbs |
அடுக்கல் குத்தினால், நடுக்கல் குத்துவாள்.
அடுக்களை உறவு இல்லாமல் அம்பலத்து உறவா?
அடுக்களைக் கிணற்றிலே அமுதம் எழுந்தாற் போல்,
அடுக்களைக்கு ஒரு பெண்ணும் அம்பலத்துக்கு ஓர் ஆணும்.
அடுக்களைக் குற்றம் சோறு குழைந்தது; அகமுடையான் குற்றம் பெண்ணாய்ப் பிறந்தது.
அடுக்களைப் பூனைபோல் இடுக்கிலே ஒளிக்கி றது.
அடுக்களைப் பெண்ணுக்கு அழகு வேண்டுமா?
அடுக்குகிற அருமை உடைக்கிற நாய்க்குத் தெரியுமா?
அடுத்தகத்துக்காரிக்குப் பிள்ளை பிறந்ததென்று உலக்கையை எடுத்து இடித்துக்கொண்டாளாம்.
அடுத்தகத்துப் பிராம்மணா பாம்பைப் பிடி; அல்லித் படகு குளிர் ந்திருக்கும்
அடுத்த கூரை வேகிறபோது தன் கூரைக்கும் மோசம்.
அடுத்ததன் தள்மை ஆன்மா ஆகும்.
அடுத்தவரை அகல விடலாகாது.
அடுத்தவரைக் கெடுக்கலாகாது,
அடுத்தவளுக்கு அகமுடையான் வந்தது போல.
அடுத்தவன் தலையில் நரை என்பானேன்? அவன் அதைச் சிரை என்பானேன்?
அடுத்தவன் வாழப் பகலே குடி எடுப்பான்.
அடுத்தவனை ஒரு போதும் கெடுக்கலாகாது.
அடுத்தவனைக் கெடுக்கலாமா?
அடுத்த வீட்டில் மொச்சை வேகிறதென்று அடிவயிறு பிய்த்துக் கொண்டு போகிறது,
அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்கு இரைச்சல் லாபம்,
அடுதத வீட்டுக்காரனுக்கு அதியோகம் வந்தால் அண்டை வீடு குதிரைலாயம்,
அடுத்த வீட்டுக்காரனுக்கு மணியம் போகிறது; ஒன்றாகக் காது அறுத்துக் கொள்ளுங்கள்,
அடுத்த வீட்டுக்காரி பிள்ளை பெற்றாள் என்று அம்மிக்குழவி எடுத்துக் குத்திக் கொண்டாளாம்.
அடுத்தாரைக் கெடுக்கிறதா?
அடுத்தாரைக் கெடுத்து அன்னம்: இட்டார் வீட்டில் கன்னம் இடுகிறான் .
அடுத்தாரைக் கோபித்தால் கெடுத்தாலும் கெடுப்பார்.
அடுத்து அடுத்துச் சொன்னால் தொடுத்த காரியம் முடியும்.
அடுத்து அடுத்துப் போனால் அடுத்த வீடும் பகை, அடுத்துக் கெடுப்பவர்,
அடுத்துக் கெடுப்பான் கபடன்; கொடுத்துக் கெடுப்பான் மார்வாடி; தொடுத்துக் கெடுப்பாள் மடந்தை.
அடுத்துச் சொன்னால் எடுத்த காரியம் முடியும்.
அடுத்து முயன்றாலும் ஆகும் நாள்தான் ஆகும்,