திருமந்திரம் கடவுள் வாழ்த்து பாயிரம் - 7 | Thirumanthiram Payiram - 7 |
கடவுள் வாழ்த்து பாயிரம் - 7
முன்னைஒப் பாயுள்ள மூவர்க்கும் மூத்தவன்
தன்னைஒப் பாய்ஒன்றும் இல்லாத் தலைமகன்
தன்னைஅப் பாயெனில் அப்பனு மாயுளன்
பொன்னைஒப் பாகின்ற போதகத் தானே.
விளக்கம்:
- முன்னைஒப் பாயுள்ள மூவர்க்கும் மூத்தவன் - மூன்று முதன்மைப் பொருள்களுக்கும் மூத்தவன்.
- தன்னைஒப் பாய்ஒன்றும் இல்லாத் தலைமகன் - தன்னை ஒப்பானவர் எவரும் இல்லாத தலைவன்.
- தன்னைஅப் பாயெனில் அப்பனு மாயுளன் - தன்னை அப்பா எனின், அப்பனாகவும் உள்ளவன்.
- பொன்னைஒப் பாகின்ற போதகத் தானே - பொன்னிற்கு ஒப்பான சைவத் தலைவர்.