பெருமை 971-980 | Thirukkural, திருக்குறள் 971-980 |
Thirukkural, திருக்குறள் 971-980 :-
பெருமை |
|
971 |
ஒளி, ஒருவற்கு உள்ள வெறுக்கை; இளி ஒருவற்கு, |
|
‘அஃது இறந்து வாழ்தும்’ எனல். |
|
|
972 |
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும்; சிறப்பு ஒவ்வா, |
|
செய்தொழில் வேற்றுமையான். |
|
|
973 |
மேல் இருந்தும், மேல் அல்லார் மேல் அல்லர்; கீழ் இருந்தும், |
|
கீழ் அல்லார், கீழ் அல்லவர். |
|
|
974 |
ஒருமை மகளிரே போல, பெருமையும், |
|
தன்னைத்தான் கொண்டு ஒழுகின், உண்டு. |
|
|
975 |
பெருமை உடையவர் ஆற்றுவார்-ஆற்றின் |
|
அருமை உடைய செயல். |
|
|
976 |
சிறியார் உணர்ச்சியுள் இல்லை-'பெரியாரைப் |
|
பேணிக் கொள்வேம்' என்னும் நோக்கு. |
|
|
977 |
இறப்பே புரிந்த தொழிற்று ஆம் சிறப்பும்தான் |
|
சீர் அல்லவர்கண் படின். |
|
|
978 |
பணியுமாம், என்றும் பெருமை; சிறுமை |
|
அணியுமாம், தன்னை வியந்து. |
|
|
979 |
பெருமை பெருமிதம் இன்மை; சிறுமை |
|
பெருமிதம் ஊர்ந்துவிடல். |
|
|
980 |
அற்றம் மறைக்கும் பெருமை; சிறுமைதான் |
|
குற்றமே கூறிவிடும். |