மருந்து 941-950 | Thirukkural, திருக்குறள் 941-950 |
Thirukkural, திருக்குறள் 941-950 :-
மருந்து |
|
941 |
மிகினும் குறையினும், நோய் செய்யும்-நூலோர் |
|
வளி முதலா எண்ணிய மூன்று. |
|
|
942 |
மருந்து என வேண்டாவாம், யாக்கைக்கு- அருந்தியது, |
|
அற்றது போற்றி உணின். |
|
|
943 |
அற்றால், அளவு அறிந்து உண்க! அஃது உடம்பு |
|
பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு. |
|
|
944 |
அற்றது அறிந்து, கடைப்பிடித்து, மாறு அல்ல |
|
துய்க்க, துவரப் பசித்து!. |
|
|
945 |
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின், |
|
ஊறுபாடு இல்லை, உயிர்க்கு. |
|
|
946 |
இழிவு அறிந்து உண்பான்கண் இன்பம்போல், நிற்கும், |
|
கழி பேர் இரையான்கண் நோய். |
|
|
947 |
தீ அளவு அன்றித் தெரியான் பெரிது உண்ணின், |
|
நோய் அளவு இன்றிப் படும். |
|
|
948 |
நோய் நாடி நோய் முதல் நாடி, அது தணிக்கும் |
|
வாய் நாடி, வாய்ப்பச் செயல்!. |
|
|
949 |
உற்றான் அளவும், பிணி அளவும், காலமும், |
|
கற்றான், கருதிச் செயல்!. |
|
|
950 |
உற்றவன், தீர்ப்பான், மருந்து, உழைச்செல்வான், என்று |
|
அப் பால் நாற் கூற்றே-மருந்து. |