கள் உண்ணாமை 921-930 | Thirukkural, திருக்குறள் 921-930 |
Thirukkural, திருக்குறள் 921-930 :-
கள் உண்ணாமை |
|
921 |
உட்கப் படாஅர், ஒளி இழப்பர், எஞ்ஞான்றும்- |
|
கள்-காதல் கொண்டு ஒழுகுவார். |
|
|
922 |
உண்ணற்க, கள்ளை! உணில், உண்க, சான்றோரான் |
|
எண்ணப்பட வேண்டாதார்!. |
|
|
923 |
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால்; என், மற்றுச் |
|
சான்றோர் முகத்துக் களி!. |
|
|
924 |
நாண் என்னும் நல்லாள் புறங்கொடுக்கும்-கள் என்னும் |
|
பேணாப் பெருங் குற்றத்தார்க்கு. |
|
|
925 |
கை அறியாமை உடைத்தே-பொருள் கொடுத்து, |
|
மெய் அறியாமை கொளல். |
|
|
926 |
துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர்;-எஞ்ஞான்றும் |
|
நஞ்சு உண்பார் கள் உண்பவர். |
|
|
927 |
உள் ஒற்றி உள்ளூர் நகப்படுவர்-எஞ்ஞான்றும் |
|
கள் ஒற்றிக் கண் சாய்பவர். |
|
|
928 |
களித்து அறியேன் என்பது கைவிடுக-நெஞ்சத்து |
|
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்!. |
|
|
929 |
களித்தானைக் காரணம் காட்டுதல்-கீழ் நீர்க் |
|
குளித்தானைத் தீத் துரீஇயற்று. |
|
|
930 |
கள் உண்ணாப் போழ்தில், களித்தானைக் காணுங்கால், |
|
உள்ளான்கொல், உண்டதன் சோர்வு!. |