பெரியாரைப் பிழையாமை 891-900 | Thirukkural, திருக்குறள் 891-900 |
Thirukkural, திருக்குறள் 891-900 :-
பெரியாரைப் பிழையாமை |
|
891 |
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை; போற்றுவார் |
|
போற்றலுள் எல்லாம் தலை. |
|
|
892 |
பெரியாரைப் பேணாது ஒழுகின், பெரியாரால் |
|
பேரா இடும்பை தரும். |
|
|
893 |
கெடல்வேண்டின், கேளாது செய்க-அடல் வேண்டின், |
|
ஆற்றுபவர்கண் இழுக்கு!. |
|
|
894 |
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால்-ஆற்றுவார்க்கு |
|
ஆற்றாதார் இன்னா செயல். |
|
|
895 |
யாண்டுச் சென்று யாண்டும் உளர் ஆகார்-வெந் துப்பின் |
|
வேந்து செறப்பட்டவர். |
|
|
896 |
எரியான் சுடப்படினும், உய்வு உண்டாம்; உய்யார், |
|
பெரியார்ப் பிழைத்து ஒழுகுவார். |
|
|
897 |
வகை மாண்ட வாழ்க்கையும், வான் பொருளும் என் ஆம்- |
|
தகை மாண்ட தக்கார் செறின்?. |
|
|
898 |
குன்று அன்னார் குன்ற மதிப்பின், குடியொடு, |
|
நின்றன்னார் மாய்வர், நிலத்து. |
|
|
899 |
ஏந்திய கொள்கையார் சீறின், இடை முரிந்து, |
|
வேந்தனும் வேந்து கெடும். |
|
|
900 |
இறந்து அமைந்த சார்புஉடையர் ஆயினும், உய்யார்- |
|
சிறந்து அமைந்த சீரார் செறின். |