உட்பகை 881-890 | Thirukkural, திருக்குறள் 881-890 |
Thirukkural, திருக்குறள் 881-890 :-
உட்பகை |
|
881 |
நிழல் நீரும் இன்னாத இன்னா-தமர் நீரும், |
|
இன்னா ஆம், இன்னா செயின். |
|
|
882 |
வாள்போல் பகைவரை அஞ்சற்க! அஞ்சுக, |
|
கேள்போல் பகைவர் தொடர்பு. |
|
|
883 |
உட்பகை அஞ்சித் தற் காக்க! உலைவு இடத்து, |
|
மட்பகையின் மாணத் தெறும். |
|
|
884 |
மனம் மாணா உட்பகை தோன்றின், இனம் மாணா |
|
ஏதம் பலவும் தரும். |
|
|
885 |
உறல் முறையான் உட்பகை தோன்றின், இறல் முறையான் |
|
ஏதம் பலவும் தரும். |
|
|
886 |
ஒன்றாமை ஒன்றியார்கண் படின், எஞ்ஞான்றும், |
|
பொன்றாமை ஒன்றல் அரிது. |
|
|
887 |
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும், கூடாதே- |
|
உட்பகை உற்ற குடி. |
|
|
888 |
அரம் பொருத பொன் போல, தேயும் உரம், பொருது- |
|
உட்பகை உற்ற குடி. |
|
|
889 |
எட் பகவு அன்ன சிறுமைத்தேஆயினும், |
|
உட்பகை, உள்ளது ஆம், கேடு. |
|
|
890 |
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை-குடங்கருள் |
|
பாம்போடு உடன் உறைந்தற்று. |