பகைமாட்சி 861-870 | Thirukkural, திருக்குறள் 861-870 |
Thirukkural, திருக்குறள் 861-870 :-
பகைமாட்சி |
|
861 |
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக! ஓம்பா, |
|
மெலியார்மேல் மேக, பகை!. |
|
|
862 |
அன்பு இலன்; ஆன்ற துணை இலன்; தான் துவ்வான்;- |
|
என் பரியும், ஏதிலான் துப்பு?. |
|
|
863 |
அஞ்சும்; அறியான்; அமைவு இலன்; ஈகலான்;- |
|
தஞ்சம் எளியன், பகைக்கு. |
|
|
864 |
நீங்கான் வெகுளி; நிறை இலன்;- எஞ்ஞான்றும், |
|
யாங்கணும், யார்க்கும், எளிது. |
|
|
865 |
வழி நோக்கான்; வாய்ப்பன செய்யான்; பழி நோக்கான்; |
|
பண்பு இலன்;- பற்றார்க்கு இனிது. |
|
|
866 |
காணாச் சினத்தான், கழி பெருங் காமத்தான்,- |
|
பேணாமை பேணப்படும். |
|
|
867 |
கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற- அடுத்து இருந்து, |
|
மாணாத செய்வான் பகை. |
|
|
868 |
குணன் இலனாய், குற்றம் பலஆயின், மாற்றார்க்கு, |
|
இனன் இலன் ஆம்; ஏமாப்பு உடைத்து. |
|
|
869 |
செறுவார்க்குச் சேண், இகவா, இன்பம்-அறிவு இலா |
|
அஞ்சும் பகைவர்ப் பெறின். |
|
|
870 |
கல்லான் வெகுளும் சிறு பொருள், எஞ்ஞான்றும், |
|
ஒல்லானை ஒல்லாது, ஒளி. |