புல்லறிவு ஆண்மை 841-850 | Thirukkural, திருக்குறள் 841-850 |
Thirukkural, திருக்குறள் 841-850 :-
புல்லறிவு ஆண்மை |
|
841 |
அறிவு இன்மை, இன்மையுள் இன்மை, பிறிது இன்மை |
|
இன்மையா வையாது, உலகு. |
|
|
842 |
அறிவு இலான் நெஞ்சு உவந்து ஈதல், பிறிது யாதும் |
|
இல்லை, பெறுவான் தவம். |
|
|
843 |
அறிவு இலார் தாம் தம்மைப் பீழிக்கும் பீழை |
|
செறுவார்க்கும் செய்தல் அரிது. |
|
|
844 |
'வெண்மை எனப்படுவது யாது?' எனின், ‘ஒண்மை |
|
உடையம் யாம்!’ என்னும் செருக்கு. |
|
|
845 |
கல்லாத மேற்கொண்டு ஒழுகல், கசடு அற |
|
வல்லதூஉம், ஐயம் தரும். |
|
|
846 |
அற்றம் மறைத்தலோ புல்லறிவு-தம்வயின் |
|
குற்றம் மறையாவழி. |
|
|
847 |
அரு மறை சோரும் அறிவு இலான் செய்யும், |
|
பெரு மிறை, தானே தனக்கு. |
|
|
848 |
ஏவவும் செய்கலான், தான் தேறான், அவ் உயிர் |
|
போஒம் அளவும் ஓர் நோய். |
|
|
849 |
காணாதாற் காட்டுவான் தான் காணான்; காணாதான் |
|
கண்டான் ஆம், தான் கண்ட ஆறு. |
|
|
850 |
உலகத்தார், ‘உண்டு’ என்பது ‘இல்’ என்பான் வையத்து |
|
அலகையா வைக்கப்படும். |