கூடா நட்பு 821-830 | Thirukkural, திருக்குறள் 821 - 830 |
Thirukkural, திருக்குறள் 821 - 830 :-
கூடா நட்பு |
|
821 |
சீர் இடம் காணின், எறிதற்குப் பட்டடை- |
|
நேரா நிரந்தவர் நட்பு. |
|
|
822 |
இனம் போன்று இனம் அல்லார் கேண்மை, மகளிர் |
|
மனம் போல, வேறுபடும். |
|
|
823 |
பல நல்ல கற்றக்கடைத்தும், மனம் நல்லர் |
|
ஆகுதல் மாணார்க்கு அரிது. |
|
|
824 |
முகத்தின் இனிய நகாஅ, அகத்து இன்னா |
|
வஞ்சரை அஞ்சப்படும். |
|
|
825 |
மனத்தின் அமையாதவரை, எனைத்து ஒன்றும், |
|
சொல்லினான் தேறற்பாற்று அன்று. |
|
|
826 |
நட்டார்போல் நல்லவை சொல்லினும், ஒட்டார் சொல் |
|
ஒல்லை உணரப்படும். |
|
|
827 |
சொல் வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க-வில் வணக்கம் |
|
தீங்கு குறித்தமையான்!. |
|
|
828 |
தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்; ஒன்னார் |
|
அழுத கண்ணீரும், அனைத்து. |
|
|
829 |
மிகச் செய்து, தம் எள்ளுவாரை நகச் செய்து, |
|
நட்பினுள் சாப் புல்லற்பாற்று. |
|
|
830 |
பகை நட்பு ஆம் காலம் வருங்கால், முகம் நட்டு, |
|
அகம் நட்பு ஒரீஇவிடல்!. |