தீ நட்பு 811-820 | Thirukkural, திருக்குறள் 811-820 |
Thirukkural, திருக்குறள் 811-820 :-
தீ நட்பு |
|
811 |
பருகுவார் போலினும், பண்பு இலார் கேண்மை |
|
பெருகலின் குன்றல் இனிது. |
|
|
812 |
உறின் நட்டு, அறின் ஒரூஉம் ஒப்பு இலார் கேண்மை |
|
பெறினும், இழப்பினும், என்?. |
|
|
813 |
உறுவது சீர்தூக்கும் நட்பும், பெறுவது |
|
கொள்வாரும், கள்வரும் நேர். |
|
|
814 |
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லா மா அன்னார் |
|
தமரின், தனிமை தலை. |
|
|
815 |
செய்து ஏமம் சாரா, சிறியவர் புன் கேண்மை |
|
எய்தலின் எய்தாமை நன்று. |
|
|
816 |
பேதை பெருங் கெழீஇ நட்பின், அறிவு உடையார் |
|
ஏதின்மை கோடி உறும். |
|
|
817 |
நகை வகையர் ஆகிய நட்பின், பகைவரான் |
|
பத்து அடுத்த கோடி உறும். |
|
|
818 |
ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை |
|
சொல்லாடார், சோரவிடல்!. |
|
|
819 |
கனவினும் இன்னாது மன்னோ-வினை வேறு |
|
சொல் வேறு பட்டார் தொடர்பு!. |
|
|
820 |
எனைத்தும் குறுகுதல் ஓம்பல்-மனைக் கெழீஇ, |
|
மன்றில் பழிப்பார் தொடர்பு!. |