பழைமை 801-810 | Thirukkural, திருக்குறள் 801-810 |
Thirukkural, திருக்குறள் 801-810 :-
பழைமை |
|
801 |
'பழைமை எனப்படுவது யாது?' எனின், யாதும் |
|
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. |
|
|
802 |
நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை; மற்று அதற்கு |
|
உப்பு ஆதல் சான்றோர் கடன். |
|
|
803 |
பழகிய நட்பு எவன் செய்யும்-கெழுதகைமை |
|
செய்தாங்கு அமையாக்கடை?. |
|
|
804 |
விழைதகையான் வேண்டியிருப்பர்-கெழுதகையான் |
|
கேளாது நட்டார் செயின். |
|
|
805 |
பேதைமை ஒன்றோ, பெருங்கிழமை என்று உணர்க- |
|
நோ தக்க நட்டார் செயின்!. |
|
|
806 |
எல்லைக்கண் நின்றார் துறவார்-தொலைவிடத்தும், |
|
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. |
|
|
807 |
அழிவந்த செய்யினும், அன்பு அறார்-அன்பின் |
|
வழிவந்த கேண்மையவர். |
|
|
808 |
கேள் இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு |
|
நாள், இழுக்கம் நட்டார் செயின். |
|
|
809 |
கெடாஅர், வழிவந்த கேண்மையார் கேண்மை |
|
விடாஅர் விழையும், உலகு. |
|
|
810 |
விழையார் விழையப்படுப-பழையார்கண் |
|
பண்பின் தலைப்பிரியாதார். |