குறிப்பு அறிவுறுத்தல் 1271-1280 | Thirukkural, திருக்குறள் 1271-1280 |
Thirukkural, திருக்குறள் 1271-1280 :-
குறிப்பு அறிவுறுத்தல் |
|
1271 |
கரப்பினும், கையிகந்து ஒல்லா, நின் உண்கண் |
|
உரைக்கல் உறுவது ஒன்று உண்டு. |
|
|
1272 |
கண் நிறைந்த காரிகை, காம்பு ஏர் தோள், பேதைக்குப் |
|
பெண் நிறைந்த நீர்மை பெரிது. |
|
|
1273 |
மணியுள் திகழ்தரும் நூல்போல், மடந்தை |
|
அணியுள் திகழ்வது ஒன்று உண்டு. |
|
|
1274 |
முகை மொக்குள் உள்ளது நாற்றம்போல், பேதை |
|
நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு. |
|
|
1275 |
செறிதொடி செய்து இறந்த கள்ளம், உறு துயர் |
|
தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து. |
|
|
1276 |
பெரிது ஆற்றிப் பெட்பக் கலத்தல், அரிது ஆற்றி, |
|
அன்பு இன்மை சூழ்வது உடைத்து. |
|
|
1277 |
தண்ணந் துறைவன் தணந்தமை, நம்மினும் |
|
முன்னம் உணர்ந்த, வளை. |
|
|
1278 |
நெருநற்றுச் சென்றார் எம் காதலர்; யாமும் |
|
எழு நாளேம், மேனி பசந்து. |
|
|
1279 |
தொடி நோக்கி, மென் தோளும் நோக்கி, அடி நோக்கி, |
|
அஃது, ஆண்டு அவள் செய்தது. |
|
|
1280 |
பெண்ணினான் பெண்மை உடைத்து என்ப-கண்ணினான் |
|
காம நோய் சொல்லி இரவு. |