நிறை அழிதல் 1251-1260 | Thirukkural, திருக்குறள் 1251-1260 |
Thirukkural, திருக்குறள் 1251-1260 :-
நிறை அழிதல் |
|
1251 |
காமக் கணிச்சி உடைக்கும்-நிறை என்னும் |
|
நாணுத் தாழ் வீழ்த்த கதவு. |
|
|
1252 |
காமம் என ஒன்றோ கண் இன்று! என் நெஞ்சத்தை |
|
யாமத்தும் ஆளும், தொழில். |
|
|
1253 |
மறைப்பேன்மன் காமத்தை யானோ; குறிப்பு இன்றித் |
|
தும்மல்போல் தோன்றிவிடும். |
|
|
1254 |
நிறை உடையேன் என்பேன்மன், யானோ; என் காமம், |
|
மறை இறந்து, மன்றுபடும். |
|
|
1255 |
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை, காம நோய் |
|
உற்றார் அறிவது ஒன்று அன்று. |
|
|
1256 |
செற்றவர்பின் சேறல் வேண்டி,-அளித்துஅரோ!- |
|
எற்று, என்னை உற்ற துயர்?. |
|
|
1257 |
நாண் என ஒன்றோ அறியலம்-காமத்தான், |
|
பேணியார் பெட்ப செயின். |
|
|
1258 |
பல மாயக் கள்வன் பணிமொழி அன்றோ-நம் |
|
பெண்மை உடைக்கும் படை!. |
|
|
1259 |
'புலப்பல்' எனச் சென்றேன்; புல்லினேன், நெஞ்சம் |
|
கலத்தல் உறுவது கண்டு. |
|
|
1260 |
நிணம் தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ- |
|
புணர்ந்து ஊடி நிற்பேம் எனல்?. |