| உறுப்பு நலன் அழிதல் 1231-1240 | Thirukkural, திருக்குறள் 1231-1240 | 
Thirukkural, திருக்குறள் 1231-1240 :-
| உறுப்பு நலன் அழிதல் | 
 | 
| 1231 | சிறுமை நமக்கு ஒழியச் சேண் சென்றார் உள்ளி, | 
| 
 | நறு மலர் நாணின, கண். | 
| 
 | 
 | 
| 1232 | நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்- | 
| 
 | பசந்து பனி வாரும் கண். | 
| 
 | 
 | 
| 1233 | தணந்தமை சால அறிவிப்ப போலும்- | 
| 
 | மணந்த நாள் வீங்கிய தோள். | 
| 
 | 
 | 
| 1234 | பணை நீங்கிப் பைந் தொடி சோரும்-துணை நீங்கித் | 
| 
 | தொல் கவின் வாடிய தோள். | 
| 
 | 
 | 
| 1235 | கொடியார் கொடுமை உரைக்கும்-தொடியொடு | 
| 
 | தொல் கவின் வாடிய தோள். | 
| 
 | 
 | 
| 1236 | தொடியொடு தோள் நெகிழ நோவல்-அவரை, | 
| 
 | ‘கொடியர்’ எனக் கூறல் நொந்து. | 
| 
 | 
 | 
| 1237 | பாடு பெறுதியோ-நெஞ்சே!-கொடியார்க்கு என் | 
| 
 | வாடு தோட் பூசல் உரைத்து?. | 
| 
 | 
 | 
| 1238 | முயங்கிய கைகளை ஊக்க, பசந்தது- | 
| 
 | பைந் தொடிப் பேதை நுதல்!. | 
| 
 | 
 | 
| 1239 | முயக்கிடைத் தண் வளி போழ, பசப்பு உற்ற- | 
| 
 | பேதை பெரு மழைக்கண். | 
| 
 | 
 | 
| 1240 | கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே- | 
| 
 | ஒள் நுதல் செய்தது கண்டு. |