பசப்பு உறு பருவரல் 1181-1190 | Thirukkural, திருக்குறள் 1181-1190 |
Thirukkural, திருக்குறள் 1181-1190 :-
பசப்பு உறு பருவரல் |
|
1181 |
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன்; பசந்த என் |
|
பண்பு யார்க்கு உரைக்கோ, பிற. |
|
|
1182 |
அவர் தந்தார் என்னும் தகையால் இவர்தந்து, என் |
|
மேனிமேல் ஊரும், பசப்பு. |
|
|
1183 |
சாயலும் நாணும் அவர் கொண்டார்-கைம்மாறா |
|
நோயும் பசலையும் தந்து. |
|
|
1184 |
உள்ளுவன்மன் யான்; உரைப்பது அவர்திறமால்; |
|
கள்ளம் பிறவோ, பசப்பு. |
|
|
1185 |
உவக்காண், எம் காதலர் செல்வார்; இவக்காண், என் |
|
மேனி பசப்பு ஊர்வது!. |
|
|
1186 |
விளக்கு அற்றம் பார்க்கும் இருளேபோல், கொண்கன் |
|
முயக்கு அற்றம் பார்க்கும், பசப்பு. |
|
|
1187 |
புல்லிக் கிடந்தேன், புடைபெயர்ந்தேன்; அவ் அளவில், |
|
அள்ளிக்கொள்வற்றே, பசப்பு. |
|
|
1188 |
'பசந்தாள் இவள்' என்பது அல்லால், ‘இவளைத் |
|
துறந்தார் அவர்’ என்பார் இல். |
|
|
1189 |
பசக்கமன் பட்டாங்கு, என் மேனி-நயப்பித்தார் |
|
நல் நிலையர் ஆவர் எனின்!. |
|
|
1190 |
பசப்பு எனப் பேர் பெறுதல் நன்றே-நயப்பித்தார் |
|
நல்காமை தூற்றார் எனின். |