கண் விதுப்பு அழிதல் 1171-1180 | Thirukkural, திருக்குறள் 1171-1130 |
Thirukkural, திருக்குறள் 1171-1130 :-
கண் விதுப்பு அழிதல் |
|
1171 |
கண்தாம் கலுழ்வது எவன்கொலோ-தண்டா நோய், |
|
தாம் காட்ட, யாம் கண்டது!. |
|
|
1172 |
தெரிந்து உணரா நோக்கிய உண்கண் பரிந்து உணரா, |
|
பைதல் உழப்பது எவன்?. |
|
|
1173 |
கதுமெனத் தாம் நோக்கித் தாமே கலுழும் |
|
இது நகத்தக்கது உடைத்து. |
|
|
1174 |
பெயல் ஆற்றா நீர் உலந்த, உண்கண்-உயல் ஆற்றா |
|
உய்வு இல் நோய் என்கண் நிறுத்து. |
|
|
1175 |
படல் ஆற்றா, பைதல் உழக்கும்-கடல் ஆற்றாக் |
|
காம நோய் செய்த என் கண். |
|
|
1176 |
ஓஒ, இனிதே!-எமக்கு இந் நோய் செய்த கண் |
|
தாஅம் இதற்பட்டது. |
|
|
1177 |
உழந்து உழந்து உள்நீர் அறுக-விழைந்து இழைந்து |
|
வேண்டி அவர்க் கண்ட கண்!. |
|
|
1178 |
பேணாது பெட்டார் உளர்மன்னோ-மற்று அவர்க் |
|
காணாது அமைவு இல கண். |
|
|
1179 |
வாராக்கால், துஞ்சா; வரின், துஞ்சா; ஆயிடை |
|
ஆர் அஞர் உற்றன கண். |
|
|
1180 |
மறை பெறல் ஊரார்க்கு அரிது அன்றால்-எம்போல் |
|
அறை பறை கண்ணார் அகத்து. |