படர் மெலிந்து இரங்கல் 1161-1170 | Thirukkural, திருக்குறள் 1161-1170 |
Thirukkural, திருக்குறள் 1161-1170 :-
படர் மெலிந்து இரங்கல் |
|
1161 |
மறைப்பேன்மன் யான், இஃதோ, நோயை-இறைப்பவர்க்கு |
|
ஊற்றுநீர் போல மிகும். |
|
|
1162 |
கரத்தலும் ஆற்றேன், இந் நோயை; நோய் செய்தார்க்கு |
|
உரைத்தலும் நாணுத் தரும். |
|
|
1163 |
காமமும் நாணும் உயிர் காவாத் தூங்கும், என் |
|
நோனா உடம்பினகத்து. |
|
|
1164 |
காமக் கடல் மன்னும் உண்டே;அது நீந்தும் |
|
ஏமப் புணை மன்னும் இல். |
|
|
1165 |
துப்பின் எவன் ஆவர்மன்கொல்-துயர் வரவு |
|
நட்பினுள் ஆற்றுபவர். |
|
|
1166 |
இன்பம் கடல் மற்றுக் காமம்; அஃது அடுங்கால், |
|
துன்பம் அதனின் பெரிது. |
|
|
1167 |
காமக் கடும் புனல் நீந்திக் கரை காணேன், |
|
யாமத்தும், யானே உளேன். |
|
|
1168 |
மன் உயிர் எல்லாம் துயிற்றி,-அளித்து, இரா!- |
|
என் அல்லது இல்லை, துணை. |
|
|
1169 |
கொடியார் கொடுமையின் தாம் கொடிய-இந் நாள் |
|
நெடிய கழியும் இரா. |
|
|
1170 |
உள்ளம் போன்று உள்வழிச் செல்கிற்பின்,வெள்ளநீர் |
|
நீந்தல மன்னோ, என் கண். |