அலர் அறிவுறுத்தல் 1141-1150 | Thirukkural, திருக்குறள் 1141-1150 |
Thirukkural, திருக்குறள் 1141-1150 :-
அலர் அறிவுறுத்தல் |
|
1141 |
அலர் எழ, ஆர் உயிர் நிற்கும்; அதனைப் |
|
பலர் அறியார், பாக்கியத்தால். |
|
|
1142 |
மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது, |
|
அலர் எமக்கு ஈந்தது, இவ் ஊர். |
|
|
1143 |
உறாஅதோ, ஊர் அறிந்த கௌவை? அதனைப் |
|
பெறாஅது பெற்றன்ன நீர்த்து. |
|
|
1144 |
கவ்வையான் கவ்விது, காமம்; அது இன்றேல், |
|
தவ்வென்னும், தன்மை இழந்து. |
|
|
1145 |
களித்தொறும் கள் உண்டல் வேட்டற்றால்-காமம் |
|
வெளிப்படும்தோறும் இனிது. |
|
|
1146 |
கண்டது மன்னும் ஒரு நாள்; அலர் மன்னும் |
|
திங்களைப் பாம்பு கொண்டற்று. |
|
|
1147 |
ஊரவர் கௌவை எருவாக,அன்னை சொல் |
|
நீராக, நீளும்-இந் நோய். |
|
|
1148 |
'நெய்யால் எரி நுதுப்பேம்' என்றற்றால்-'கௌவையான் |
|
காமம் நுதுப்பேம்' எனல். |
|
|
1149 |
அலர் நாண ஒல்வதோ-'அஞ்சல் ஓம்பு!' என்றார் |
|
பலர் நாண நீத்தக்கடை?. |
|
|
1150 |
தாம் வேண்டின் நல்குவர், காதலர்; யாம் வேண்டும் |
|
கௌவை எடுக்கும், இவ் ஊர். |