| நல்குரவு 1041-1050 | Thirukkural, திருக்குறள் 1041-1050 | 
Thirukkural, திருக்குறள் 1041-1050 :-
| நல்குரவு | 
 | 
| 1041 | 'இன்மையின் இன்னாதது யாது?' எனின், இன்மையின் | 
| 
 | இன்மையே இன்னாதது. | 
| 
 | 
 | 
| 1042 | இன்மை என ஒரு பாவி, மறுமையும் | 
| 
 | இம்மையும் இன்றி, வரும். | 
| 
 | 
 | 
| 1043 | தொல் வரவும் தோலும் கெடுக்கும், தொகையாக- | 
| 
 | நல்குரவு என்னும் நசை. | 
| 
 | 
 | 
| 1044 | இற்பிறந்தார்கண்ணேயும், இன்மை, இளி வந்த | 
| 
 | சொல் பிறக்கும் சோர்வு தரும். | 
| 
 | 
 | 
| 1045 | நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத் | 
| 
 | துன்பங்கள் சென்று படும். | 
| 
 | 
 | 
| 1046 | நற் பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும், நல்கூர்ந்தார் | 
| 
 | சொல் பொருட் சோர்வு படும். | 
| 
 | 
 | 
| 1047 | அறம் சாரா நல்குரவு, ஈன்ற தாயானும், | 
| 
 | பிறன் போல நோக்கப்படும். | 
| 
 | 
 | 
| 1048 | இன்றும் வருவது கொல்லோ-நெருநலும் | 
| 
 | கொன்றது போலும் நிரப்பு!. | 
| 
 | 
 | 
| 1049 | நெருப்பினுள் துஞ்சலும் ஆகும்; நிரப்பினுள் | 
| 
 | யாது ஒன்றும் கண்பாடு அரிது. | 
| 
 | 
 | 
| 1050 | துப்புரவு இல்லார் துவரத் துறவாமை | 
| 
 | உப்பிற்கும் காடிக்கும் கூற்று. |