நாண் உடைமை 1011-1020 | Thirukkural, திருக்குறள் 1011-1020 |
Thirukkural, திருக்குறள் 1011-1020 :-
நாண் உடைமை |
|
1011 |
கருமத்தான் நாணுதல், நாணு; திருநுதல் |
|
நல்லவர் நாணு, பிற. |
|
|
1012 |
ஊண், உடை, எச்சம், உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல; |
|
நாண் உடைமை மாந்தர் சிறப்பு. |
|
|
1013 |
ஊனைக் குறித்த, உயிர் எல்லாம்; நாண் என்னும் |
|
நன்மை குறித்தது, சால்பு. |
|
|
1014 |
அணி அன்றோ, நாண் உடைமை சான்றோர்க்கு! அஃது இன்றேல் |
|
பிணி அன்றே, பீடு நடை!. |
|
|
1015 |
'பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் நாணுக்கு |
|
உறைபதி' என்னும், உலகு. |
|
|
1016 |
நாண் வேலி கொள்ளாது, மன்னோ, வியல் ஞாலம் |
|
பேணலர்-மேலாயவர். |
|
|
1017 |
நாணால் உயிரைத் துறப்பர்; உயிர்ப்பொருட்டால் |
|
நாண் துறவார்;-நாண் ஆள்பவர். |
|
|
1018 |
பிறர் நாணத்தக்கது தான் நாணான் ஆயின், |
|
அறம் நாணத் தக்கது உடைத்து. |
|
|
1019 |
குலம் சுடும், கொள்கை பிழைப்பின், நலம் சுடும், |
|
நாண் இன்மை நின்றக்கடை. |
|
|
1020 |
நாண் அகத்து இல்லார் இயக்கம்-மரப்பாவை |
|
நாணால் உயிர் மருட்டியற்று. |