நாடு 731-740 | Thirukkural, திருக்குறள் 731 - 740 |
Thirukkural, திருக்குறள் 731 - 740 :-
நாடு |
|
731 |
தள்ளா விளையுளும், தக்காரும், தாழ்வு இலாச் |
|
செல்வரும், சேர்வது- நாடு. |
|
|
732 |
பெரும் பொருளான் பெட்டக்கது ஆகி, அருங் கேட்டால், |
|
ஆற்ற விளைவது-நாடு. |
|
|
733 |
பொறை ஒருங்கு மேல்வருங்கால் தாங்கி, இறைவற்கு |
|
இறை ஒருங்கு நேர்வது-நாடு. |
|
|
734 |
உறு பசியும், ஓவாப் பிணியும், செறு பகையும், |
|
சேராது இயல்வது-நாடு. |
|
|
735 |
பல் குழுவும், பாழ்செய்யும் உட்பகையும், வேந்து அலைக்கும் |
|
கொல் குறும்பும் இல்லது-நாடு. |
|
|
736 |
கேடு அறியா, கெட்ட இடத்தும் வளம் குன்றா |
|
நாடு, என்ப, நாட்டின் தலை. |
|
|
737 |
இரு புனலும், வாய்ந்த மலையும், வரு புனலும், |
|
வல் அரணும்-நாட்டிற்கு உறுப்பு. |
|
|
738 |
பிணி இன்மை, செல்வம், விளைவு, இன்பம், ஏமம்- |
|
அணி என்ப, நாட்டிற்கு-இவ் ஐந்து. |
|
|
739 |
நாடு என்ப, நாடா வளத்தன; நாடு அல்ல, |
|
நாட, வளம் தரும் நாடு. |
|
|
740 |
ஆங்கு அமைவு எய்தியக்கண்ணும் பயம் இன்றே- |
|
வேந்து அமைவு இல்லாத நாடு. |