அவை அஞ்சாமை 721-730 | Thirukkural, திருக்குறள் 721 - 730 |
Thirukkural, திருக்குறள் 721 - 730 :-
அவை அஞ்சாமை |
|
721 |
வகை அறிந்து, வல் அவை, வாய்சோரார்-சொல்லின் |
|
தொகை அறிந்த தூய்மையவர். |
|
|
722 |
கற்றாருள் கற்றார் எனப்படுவர்-கற்றார்முன் |
|
கற்ற செலச் சொல்லுவார். |
|
|
723 |
பகையகத்துச் சாவார் எளியர்; அரியர் |
|
அவையகத்து அஞ்சாதவர். |
|
|
724 |
கற்றார்முன் கற்ற செலச் சொல்லி, தாம் கற்ற, |
|
மிக்காருள், மிக்க கொளல். |
|
|
725 |
ஆற்றின், அளவு அறிந்து கற்க-அவை அஞ்சா |
|
மாற்றம் கொடுத்தற்பொருட்டு. |
|
|
726 |
வாளொடு என், வன்கண்ணர் அல்லார்க்கு?-நூலொடு என், |
|
நுண் அவை அஞ்சுபவர்க்கு?. |
|
|
727 |
பகையகத்துப் பேடி கை ஒள் வாள்-அவையகத்து |
|
அஞ்சுமவன் கற்ற நூல். |
|
|
728 |
பல்லவை கற்றும், பயம் இலரே-நல் அவையுள் |
|
நன்கு செலச் சொல்லாதார். |
|
|
729 |
'கல்லாதவரின் கடை' என்ப- ‘கற்று அறிந்தும், |
|
நல்லார் அவை அஞ்சுவார்'. |
|
|
730 |
உளர் எனினும், இல்லாரொடு ஒப்பர்-களன் அஞ்சி, |
|
கற்ற செலச் சொல்லாதார். |