அவை அறிதல் 711-720 | Thirukkural, திருக்குறள் 711 - 720 |
Thirukkural, திருக்குறள் 711 - 720 :-
அவை அறிதல் |
|
711 |
அவை அறிந்து, ஆராய்ந்து, சொல்லுக-சொல்லின் |
|
தொகை அறிந்த தூய்மையவர்!. |
|
|
712 |
இடை தெரிந்து, நன்கு உணர்ந்து, சொல்லுக- சொல்லின் |
|
நடை தெரிந்த நன்மையவர்!. |
|
|
713 |
அவை அறியார், சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின் |
|
வகை அறியார்; வல்லதூஉம் இல். |
|
|
714 |
ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல்! வெளியார்முன் |
|
வான் சுதை வண்ணம் கொளல்!. |
|
|
715 |
'நன்று' என்றவற்றுள்ளும் நன்றே-முதுவருள் |
|
முந்து கிளவாச் செறிவு. |
|
|
716 |
ஆற்றின் நிலைதளர்ந்தற்றே-வியன் புலம் |
|
ஏற்று, உணர்வார்முன்னர் இழுக்கு. |
|
|
717 |
கற்று அறிந்தார் கல்வி விளங்கும்-கசடு அறச் |
|
சொல் தெரிதல் வல்லார் அகத்து. |
|
|
718 |
உணர்வது உடையார்முன் சொல்லல்-வளர்வதன் |
|
பாத்தியுள் நீர் சொரிந்தற்று. |
|
|
719 |
புல் அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க-நல் அவையுள் |
|
நன்கு செலச் சொல்லுவார்!. |
|
|
720 |
அங்கணத்துள் உக்க அமிழ்து அற்றால்-தம் கணத்தர் |
|
அல்லார்முன் கோட்டி கொளல்!. |