தூது 681-690 | Thirukkural, திருக்குறள் 681 - 690 |
Thirukkural, திருக்குறள் 681 - 690 :-
தூது |
|
681 |
அன்பு உடைமை, ஆன்ற குடிப்பிறத்தல், வேந்து அவாம் |
|
பண்பு உடைமை,- தூது உரைப்பான் பண்பு. |
|
|
682 |
அன்பு, அறிவு, ஆராய்ந்த சொல்வன்மை-தூது உரைப்பார்க்கு |
|
இன்றியமையாத மூன்று. |
|
|
683 |
நூலாருள் நூல் வல்லன் ஆகுதல்-வேலாருள் |
|
வென்றி வினை உரைப்பான் பண்பு. |
|
|
684 |
அறிவு, உரு, ஆராய்ந்த கல்வி, இம் மூன்றன் |
|
செறிவு உடையான் செல்க, வினைக்கு. |
|
|
685 |
தொகச் சொல்லி, தூவாத நீக்கி, நகச் சொல்லி, |
|
நன்றி பயப்பது ஆம்-தூது. |
|
|
686 |
கற்று, கண் அஞ்சான், செலச் சொல்லி, காலத்தால் |
|
தக்கது அறிவது ஆம்-தூது. |
|
|
687 |
கடன் அறிந்து, காலம் கருதி, இடன் அறிந்து, |
|
எண்ணி, உரைப்பான் தலை. |
|
|
688 |
தூய்மை, துணைமை, துணிவு உடைமை, இம் மூன்றின் |
|
வாய்மை-வழி உரைப்பான் பண்பு. |
|
|
689 |
விடு மாற்றம் வேந்தர்க்கு உரைப்பான்-வடு மாற்றம் |
|
வாய் சோரா வன்கணவன். |
|
|
690 |
இறுதி பயப்பினும், எஞ்சாது, இறைவற்கு |
|
உறுதி பயப்பது ஆம்-தூது. |