வினை செயல் வகை 671-680 | Thirukkural, திருக்குறள் 671 - 680 |
Thirukkural, திருக்குறள் 671 - 680 :-
வினை செயல் வகை |
|
671 |
சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல்; அத் துணிவு |
|
தாழ்ச்சியுள் தங்குதல் தீது. |
|
|
672 |
தூங்குக, தூங்கிச் செயற்பால; தூங்கற்க, |
|
தூங்காது செய்யும் வினை. |
|
|
673 |
ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்றே; ஒல்லாக்கால், |
|
செல்லும் வாய் நோக்கிச் செயல். |
|
|
674 |
வினை, பகை என்று இரண்டின் எச்சம், நினையுங்கால், |
|
தீ எச்சம் போலத் தெறும். |
|
|
675 |
பொருள், கருவி, காலம், வினை, இடனொடு ஐந்தும் |
|
இருள் தீர எண்ணிச் செயல்!. |
|
|
676 |
முடிவும், இடையூறும், முற்றியாங்கு எய்தும் |
|
படுபயனும், பார்த்துச் செயல்!. |
|
|
677 |
செய்வினை செய்வான் செயல்முறை, அவ் வினை |
|
உள் அறிவான் உள்ளம் கொளல். |
|
|
678 |
வினையான் வினை ஆக்கிக்கோடல்-நனை கவுள் |
|
யானையால் யானை யாத்தற்று. |
|
|
679 |
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே- |
|
ஒட்டாரை ஒட்டிக்கொளல். |
|
|
680 |
உறை சிறியார் உள் நடுங்கல் அஞ்சி, குறை பெறின், |
|
கொள்வர் பெரியார்ப் பணிந்து. |