வினைத் திட்பம் 661-670 | Thirukkural, திருக்குறள் 661 - 670 |
Thirukkural, திருக்குறள் 661 - 670 :-
வினைத் திட்பம் |
|
661 |
வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத் திட்பம்; |
|
மற்றைய எல்லாம் பிற. |
|
|
662 |
ஊறு ஒரால், உற்றபின் ஒல்காமை, இவ் இரண்டின் |
|
ஆறு என்பர்-ஆய்ந்தவர் கோள். |
|
|
663 |
கடைக் கொட்கச் செய்தக்கது ஆண்மை; இடைக் கொட்கின், |
|
எற்றா விழுமம் தரும். |
|
|
664 |
சொல்லுதல் யார்க்கும் எளிய; அரிய ஆம், |
|
சொல்லிய வண்ணம் செயல். |
|
|
665 |
வீறு எய்தி மாண்டார் வினைத் திட்பம், வேந்தன்கண் |
|
ஊறு எய்தி, உள்ளப்படும். |
|
|
666 |
எண்ணிய எண்ணியாங்கு எய்துப-எண்ணியார் |
|
திண்ணியர் ஆகப்பெறின். |
|
|
667 |
உருவு கண்டு எள்ளாமை வேண்டும்-உருள் பெருந் தேர்க்கு |
|
அச்சு ஆணி அன்னார் உடைத்து. |
|
|
668 |
கலங்காது கண்ட வினைக்கண், துளங்காது |
|
தூக்கம் கடிந்து செயல். |
|
|
669 |
துன்பம் உறவரினும் செய்க, துணிவு ஆற்றி- |
|
இன்பம் பயக்கும் வினை. |
|
|
670 |
எனைத் திட்பம் எய்தியக்கண்ணும், வினைத் திட்பம் |
|
வேண்டாரை வேண்டாது, உலகு. |