இடுக்கண் அழியாமை 621-630 | Thirukkural, திருக்குறள் 621 - 630 |
Thirukkural, திருக்குறள் 621 - 630 :-
இடுக்கண் அழியாமை |
|
621 |
இடுக்கண் வருங்கால் நகுக! அதனை |
|
அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல். |
|
|
622 |
வெள்ளத்து அனைய இடும்பை, அறிவு உடையான் |
|
உள்ளத்தின் உள்ள, கெடும். |
|
|
623 |
இடும்பைக்கு இடும்பை படுப்பர்-இடும்பைக்கு |
|
இடும்பை படாஅதவர். |
|
|
624 |
மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் உற்ற |
|
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. |
|
|
625 |
அடுக்கி வரினும், அழிவு இலான் உற்ற |
|
இடுக்கண் இடுக்கண் படும். |
|
|
626 |
'அற்றேம்!' என்று அல்லற்படுபவோ-'பெற்றேம்!' என்று |
|
ஓம்புதல் தேற்றாதவர். |
|
|
627 |
'இலக்கம், உடம்பு இடும்பைக்கு' என்று, கலக்கத்தைக் |
|
கையாறாக் கொள்ளாதாம், மேல். |
|
|
628 |
இன்பம் விழையான், ‘இடும்பை இயல்பு’ என்பான், |
|
துன்பம் உறுதல் இலன். |
|
|
629 |
இன்பத்துள் இன்பம் விழையாதான், துன்பத்துள் |
|
துன்பம் உறுதல் இலன். |
|
|
630 |
இன்னாமை இன்பம் எனக் கொளின், ஆகும், தன் |
|
ஒன்னார் விழையும் சிறப்பு. |