மடி இன்மை 601-610 | Thirukkural, திருக்குறள் 601 - 610 |
Thirukkural, திருக்குறள் 601 - 610 :-
மடி இன்மை |
|
601 |
குடி என்னும் குன்றா விளக்கம், மடி என்னும் |
|
மாசு ஊர, மாய்ந்து கெடும். |
|
|
602 |
மடியை மடியா ஒழுகல்-குடியைக் |
|
குடியாக வேண்டுபவர்!. |
|
|
603 |
மடி மடிக் கொண்டு ஒழுகும் பேதை பிறந்த |
|
குடி மடியும், தன்னினும் முந்து. |
|
|
604 |
குடி மடிந்து, குற்றம் பெருகும்-மடி மடிந்து, |
|
மாண்ட உஞற்று இலவர்க்கு. |
|
|
605 |
நெடு நீர், மறவி, மடி, துயில், நான்கும் |
|
கெடும் நீரார் காமக் கலன். |
|
|
606 |
படி உடையார் பற்று அமைந்தக்கண்ணும், மடி உடையார் |
|
மாண் பயன் எய்தல் அரிது. |
|
|
607 |
இடிபுரிந்து, எள்ளும் சொல் கேட்பர்-மடிபுரிந்து |
|
மாண்ட உஞற்று இலவர். |
|
|
608 |
மடிமை குடிமைக்கண் தங்கின், தன் ஒன்னார்க்கு |
|
அடிமை புகுத்திவிடும். |
|
|
609 |
குடி, ஆண்மையுள் வந்த குற்றம், ஒருவன் |
|
மடி ஆண்மை மாற்ற, கெடும். |
|
|
610 |
மடி இலா மன்னவன் எய்தும்-அடி அளந்தான் |
|
தாஅயது எல்லாம் ஒருங்கு. |