கண்ணோட்டம் 571-580 | Thirukkural, திருக்குறள் 571 - 580 |
Thirukkural, திருக்குறள் 571 - 580 :-
கண்ணோட்டம் |
|
571 |
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை |
|
உண்மையான், உண்டு இவ் உலகு. |
|
|
572 |
கண்ணோட்டத்து உள்ளது உலகியல்; அஃது இலார் |
|
உண்மை நிலக்குப் பொறை. |
|
|
573 |
பண் என் ஆம், பாடற்கு இயைபு இன்றேல்?-கண் என் ஆம், |
|
கண்ணோட்டம் இல்லாத கண்?. |
|
|
574 |
உளபோல் முகத்து எவன் செய்யும்-அளவினால் |
|
கண்ணோட்டம் இல்லாத கண். |
|
|
575 |
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்; அஃது இன்றேல், |
|
புண் என்று உணரப்படும். |
|
|
576 |
மண்ணொடு இயைந்த மரத்து அனையர்-கண்ணொடு |
|
இயைந்து, கண்ணோடாதவர். |
|
|
577 |
கண்ணோட்டம் இல்லவர் கண் இலர்; கண் உடையார் |
|
கண்ணோட்டம் இன்மையும் இல். |
|
|
578 |
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு |
|
உரிமை உடைத்து, இவ் உலகு. |
|
|
579 |
ஒறுத்தாற்றும் பண்பினார்கண்ணும், கண்ணோடிப் |
|
பொறுத்தாற்றும் பண்பே தலை. |
|
|
580 |
பெயக் கண்டும், நஞ்சு உண்டு அமைவர்-நயத்தக்க |
|
நாகரிகம் வேண்டுபவர். |