செங்கோன்மை 541-550 | Thirukkural, திருக்குறள் 541 - 550 |
Thirukkural, திருக்குறள் 541 - 550 :-
செங்கோன்மை |
|
541 |
ஓர்ந்து, கண்ணோடாது, இறை புரிந்து, யார்மாட்டும் |
|
தேர்ந்து, செய்வஃதே முறை. |
|
|
542 |
வான் நோக்கி வாழும் உலகு எல்லாம்;-மன்னவன் |
|
கோல் நோக்கி வாழும் குடி. |
|
|
543 |
அந்தணர் நூற்கும், அறத்திற்கும், ஆதியாய் |
|
நின்றது-மன்னவன் கோல். |
|
|
544 |
குடி தழீஇக் கோல் ஓச்சும் மா நில மன்னன் |
|
அடி தழீஇ நிற்கும், உலகு. |
|
|
545 |
இயல்புளிக் கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட- |
|
பெயலும் விளையுளும் தொக்கு. |
|
|
546 |
வேல் அன்று, வென்றி தருவது; மன்னவன் |
|
கோல்; அதூஉம், கோடாது எனின். |
|
|
547 |
இறை காக்கும், வையகம் எல்லாம்; அவனை |
|
முறை காக்கும், முட்டாச் செயின். |
|
|
548 |
எண் பதத்தான் ஓரா, முறை செய்யா, மன்னவன் |
|
தண் பதத்தான் தானே கெடும். |
|
|
549 |
குடி புறங்காத்து, ஓம்பி, குற்றம் கடிதல் |
|
வடு அன்று; வேந்தன் தொழில். |
|
|
550 |
கொலையில், கொடியாரை, வேந்து ஒறுத்தல் பைங்கூழ் |
|
களை கட்டதனொடு நேர். |