பொச்சாவாமை 531-540 | Thirukkural, திருக்குறள் 531 - 540 |
Thirukkural, திருக்குறள் 531 - 540 :-
பொச்சாவாமை |
|
531 |
இறந்த வெகுளியின் தீதே-சிறந்த |
|
உவகை மகிழ்ச்சியின் சோர்வு. |
|
|
532 |
பொச்சாப்புக் கொல்லும் புகழை-அறிவினை |
|
நிச்சம் நிரப்புக் கொன்றாங்கு. |
|
|
533 |
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை; அது உலகத்து |
|
எப் பால் நூலோர்க்கும் துணிவு. |
|
|
534 |
அச்சம் உடையார்க்கு அரண் இல்லை; ஆங்கு இல்லை, |
|
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு. |
|
|
535 |
முன்னுறக் காவாது இழுக்கியான், தன் பிழை, |
|
பின் ஊறு, இரங்கிவிடும். |
|
|
536 |
இழுக்காமை யார்மாட்டும், என்றும், வழுக்காமை |
|
வாயின், அஃது ஒப்பது இல். |
|
|
537 |
அரிய என்று ஆகாத இல்லை-பொச்சாவாக் |
|
கருவியான் போற்றிச் செயின். |
|
|
538 |
புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும்; செய்யாது |
|
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். |
|
|
539 |
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக-தாம் தம் |
|
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து!. |
|
|
540 |
உள்ளியது எய்தல் எளிதுமன்-மற்றும் தான் |
|
உள்ளியது உள்ளப்பெறின். |