தெரிந்து தெளிதல் 501-510 | Thirukkural, திருக்குறள் 501-510 | 
Thirukkural, திருக்குறள் 501-510 :-
| 
 தெரிந்து தெளிதல்  | 
 
  | 
| 
 501  | 
 அறம், பொருள், இன்பம், உயிர் அச்சம், நான்கின்  | 
| 
 
  | 
 திறம் தெரிந்து தேறப்படும்.  | 
| 
 
  | 
 
  | 
| 
 502  | 
 குடிப் பிறந்து, குற்றத்தின் நீங்கி, வடுப் பரியும்  | 
| 
 
  | 
 நாண் உடையான்கட்டே தெளிவு.  | 
| 
 
  | 
 
  | 
| 
 503  | 
 அரிய கற்று, ஆசு அற்றார்கண்ணும், தெரியுங்கால்  | 
| 
 
  | 
 இன்மை அரிதே, வெளிறு.  | 
| 
 
  | 
 
  | 
| 
 504  | 
 குணம் நாடி, குற்றமும் நாடி, அவற்றுள்  | 
| 
 
  | 
 மிகை நாடி, மிக்க கொளல்!.  | 
| 
 
  | 
 
  | 
| 
 505  | 
 பெருமைக்கும், ஏனைச் சிறுமைக்கும், தத்தம்  | 
| 
 
  | 
 கருமமே கட்டளைக் கல்.  | 
| 
 
  | 
 
  | 
| 
 506  | 
 அற்றாரைத் தேறுதல் ஓம்புக; மற்று அவர்  | 
| 
 
  | 
 பற்று இலர்; நாணார் பழி.  | 
| 
 
  | 
 
  | 
| 
 507  | 
 காதன்மை கந்தா, அறிவு அறியார்த் தேறுதல்  | 
| 
 
  | 
 பேதைமை எல்லாம் தரும்.  | 
| 
 
  | 
 
  | 
| 
 508  | 
 தேரான், பிறனைத் தெளிந்தான் வழிமுறை  | 
| 
 
  | 
 தீரா இடும்பை தரும்.  | 
| 
 
  | 
 
  | 
| 
 509  | 
 தேறற்க யாரையும், தேராது; தேர்ந்த பின்,  | 
| 
 
  | 
 தேறுக, தேறும் பொருள்.  | 
| 
 
  | 
 
  | 
| 
 510  | 
 தேரான் தெளிவும், தெளிந்தான்கண் ஐயுறவும்,  | 
| 
 
  | 
 தீரா இடும்பை தரும்.  |