காலம் அறிதல் 481-490 | Thirukkural, திருக்குறள் 481 - 490 |
Thirukkural, திருக்குறள் 481 - 490 :-
காலம் அறிதல் |
|
481 |
பகல் வெல்லும், கூகையைக் காக்கை;- இகல் வெல்லும் |
|
வேந்தர்க்கு வேண்டும், பொழுது. |
|
|
482 |
பருவத்தொடு ஒட்ட ஒழுகல்-திருவினைத் |
|
தீராமை ஆர்க்கும் கயிறு. |
|
|
483 |
அரு வினை என்ப உளவோ-கருவியான் |
|
காலம் அறிந்து செயின். |
|
|
484 |
ஞாலம் கருதினும், கைகூடும்-காலம் |
|
கருதி, இடத்தான் செயின். |
|
|
485 |
காலம் கருதி இருப்பர்-கலங்காது |
|
ஞாலம் கருதுபவர். |
|
|
486 |
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொரு தகர் |
|
தாக்கற்குப் பேரும் தகைத்து. |
|
|
487 |
பொள்ளென ஆங்கே புறம் வேரார்; காலம் பார்த்து, |
|
உள் வேர்ப்பர், ஒள்ளியவர். |
|
|
488 |
செறுநரைக் காணின் சுமக்க; இறுவரை |
|
காணின் கிழக்காம் தலை. |
|
|
489 |
எய்தற்கு அரியது இயைந்தக்கால், அந் நிலையே |
|
செய்தற்கு அரிய செயல். |
|
|
490 |
கொக்கு ஒக்க, கூம்பும் பருவத்து; மற்று அதன் |
|
குத்து ஒக்க, சீர்த்த இடத்து. |