| தெரிந்து செயல் வகை 461-470 | Thirukkural, திருக்குறள் 461 - 470 | 
Thirukkural, திருக்குறள் 461 - 470 :-
| தெரிந்து செயல் வகை | 
 | 
| 461 | அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி, வழிபயக்கும் | 
| 
 | ஊதியமும் சூழ்ந்து, செயல்!. | 
| 
 | 
 | 
| 462 | தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு | 
| 
 | அரும் பொருள் யாது ஒன்றும் இல். | 
| 
 | 
 | 
| 463 | ஆக்கம் கருதி, முதல் இழக்கும் செய்வினை | 
| 
 | ஊக்கார், அறிவு உடையார். | 
| 
 | 
 | 
| 464 | தெளிவு இலதனைத் தொடங்கார்-இளிவு என்னும் | 
| 
 | ஏதப்பாடு அஞ்சுபவர். | 
| 
 | 
 | 
| 465 | வகை அறச் சூழாது எழுதல், பகைவரைப் | 
| 
 | பாத்திப் படுப்பது ஓர் ஆறு. | 
| 
 | 
 | 
| 466 | செய்தக்க அல்ல செயக் கெடும்; செய்தக்க | 
| 
 | செய்யாமையானும் கெடும். | 
| 
 | 
 | 
| 467 | எண்ணித் துணிக, கருமம்; துணிந்தபின், | 
| 
 | எண்ணுவம் என்பது இழுக்கு. | 
| 
 | 
 | 
| 468 | ஆற்றின் வருந்தா வருத்தம், பலர் நின்று | 
| 
 | போற்றினும், பொத்துப்படும். | 
| 
 | 
 | 
| 469 | நன்று ஆற்றலுள்ளும் தவறு உண்டு-அவரவர் | 
| 
 | பண்பு அறிந்து ஆற்றாக்கடை. | 
| 
 | 
 | 
| 470 | எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும்-தம்மொடு | 
| 
 | கொள்ளாத கொள்ளாது உலகு. |