வலி அறிதல் 471-480 | Thirukkural, திருக்குறள் 471 - 480 |
Thirukkural, திருக்குறள் 471 - 480 :-
வலி அறிதல் |
|
471 |
வினை வலியும், தன் வலியும், மாற்றான் வலியும், |
|
துணை வலியும், தூக்கிச் செயல். |
|
|
472 |
ஒல்வது அறிவது அறிந்து, அதன்கண் தங்கிச் |
|
செல்வார்க்குச் செல்லாதது இல். |
|
|
473 |
உடைத் தம் வலி அறியார், ஊக்கத்தின் ஊக்கி, |
|
இடைக்கண் முரிந்தார் பலர். |
|
|
474 |
அமைந்து ஆங்கு ஒழுகான், அளவு அறியான், தன்னை |
|
வியந்தான், விரைந்து கெடும். |
|
|
475 |
பீலி பெய் சாகாடும் அச்சு இறும்-அப் பண்டம் |
|
சால மிகுத்துப் பெயின். |
|
|
476 |
நுனிக் கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின் |
|
உயிர்க்கு இறுதி ஆகிவிடும். |
|
|
477 |
ஆற்றின் அளவு அறிந்து ஈக; அது பொருள் |
|
போற்றி வழங்கும் நெறி. |
|
|
478 |
ஆகு ஆறு அளவு இட்டிது ஆயினும், கேடு இல்லை- |
|
போகு ஆறு அகலாக்கடை. |
|
|
479 |
அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல |
|
இல்லாகி, தோன்றாக் கெடும். |
|
|
480 |
உள வரை தூக்காத ஒப்புரவு ஆண்மை, |
|
வள வரை வல்லைக் கெடும். |