பெரியாரைத் துணைக்கோடல் 441-450 | Thirukkural, திருக்குறள் 441 - 450 |
Thirukkural, திருக்குறள் 441 - 450 :-
பெரியாரைத் துணைக்கோடல் |
|
441 |
அறன் அறிந்து மூத்த அறிவு உடையார் கேண்மை |
|
திறன் அறிந்து, தேர்ந்து, கொளல். |
|
|
442 |
உற்ற நோய் நீக்கி, உறாஅமை முன் காக்கும் |
|
பெற்றியார்ப் பேணிக் கொளல். |
|
|
443 |
அரியவற்றுள் எல்லாம் அரிதே-பெரியாரைப் |
|
பேணித் தமராக் கொளல். |
|
|
444 |
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல், |
|
வன்மையுள் எல்லாம் தலை. |
|
|
445 |
சூழ்வார் கண் ஆக ஒழுகலான், மன்னவன் |
|
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல். |
|
|
446 |
தக்கார் இனத்தனாய், தான் ஒழுக வல்லானைச் |
|
செற்றார் செயக்கிடந்தது இல். |
|
|
447 |
இடிக்கும் துணையாரை ஆள்வாரை, யாரே, |
|
கெடுக்கும் தகைமையவர். |
|
|
448 |
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் |
|
கெடுப்பார் இலானும், கெடும். |
|
|
449 |
முதல் இலார்க்கு ஊதியம் இல்லை;-மதலை ஆம் |
|
சார்பு இலார்க்கு இல்லை, நிலை. |
|
|
450 |
பல்லார் பகை கொளலின் பத்து அடுத்த தீமைத்தே- |
|
நல்லார் தொடர் கைவிடல். |