அறிவுடைமை 421-430 | Thirukkural, திருக்குறள் 421 - 430 |
Thirukkural, திருக்குறள் 421 - 430 :-
அறிவுடைமை |
|
421 |
அறிவு, அற்றம் காக்கும் கருவி; செறுவார்க்கும் |
|
உள் அழிக்கல் ஆகா அரண். |
|
|
422 |
சென்ற இடத்தால் செலவிடா, தீது ஒரீஇ, |
|
நன்றின் பால் உய்ப்பது-அறிவு. |
|
|
423 |
எப் பொருள் யார் யார் வாய்க் கேட்பினும், அப் பொருள் |
|
மெய்ப் பொருள் காண்பது-அறிவு. |
|
|
424 |
எண் பொருளவாகச் செலச் சொல்லி, தான் பிறர்வாய் |
|
நுண் பொருள் காண்பது-அறிவு. |
|
|
425 |
உலகம் தழீஇயது ஒட்பம்; மலர்தலும் |
|
கூம்பலும் இல்லது-அறிவு. |
|
|
426 |
எவ்வது உறைவது உலகம், உலகத்தொடு |
|
அவ்வது உறைவது-அறிவு. |
|
|
427 |
அறிவு உடையார் ஆவது அறிவார்; அறிவு இலார் |
|
அஃது அறிகல்லாதவர். |
|
|
428 |
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை; அஞ்சுவது |
|
அஞ்சல், அறிவார் தொழில். |
|
|
429 |
எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை- |
|
அதிர வருவதோர் நோய். |
|
|
430 |
அறிவு உடையார் எல்லாம் உடையார்; அறிவு இலார் |
|
என் உடையரேனும் இலர். |