கல்வி 391-400 | Thirukkural, திருக்குறள் 391 - 400 |
Thirukkural, திருக்குறள் 391 - 400 :-
கல்வி |
|
391 |
கற்க, கசடு அற, கற்பவை! கற்றபின், |
|
நிற்க, அதற்குத் தக!. |
|
|
392 |
'எண்' என்ப, ஏனை ‘எழுத்து’ என்ப, இவ் இரண்டும் |
|
‘கண்’ என்ப, வாழும் உயிர்க்கு. |
|
|
393 |
கண் உடையர் என்பவர் கற்றோர்; முகத்து இரண்டு |
|
புண் உடையர், கல்லாதவர். |
|
|
394 |
உவப்பத் தலைக்கூடி, உள்ளப் பிரிதல் |
|
அனைத்தே-புலவர் தொழில். |
|
|
395 |
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்; |
|
கடையரே, கல்லாதவர். |
|
|
396 |
தொட்டனைத்து ஊறும், மணற் கேணி;-மாந்தர்க்குக் |
|
கற்றனைத்து ஊறும், அறிவு. |
|
|
397 |
யாதானும் நாடு ஆமால்; ஊர் ஆமால்; என், ஒருவன் |
|
சாம் துணையும் கல்லாதவாறு?. |
|
|
398 |
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு |
|
எழுமையும் ஏமாப்பு உடைத்து. |
|
|
399 |
தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு, |
|
காமுறுவர், கற்று அறிந்தார். |
|
|
400 |
கேடு இல் விழுச் செல்வம் கல்வி; ஒருவற்கு |
|
மாடு அல்ல, மற்றையவை. |