இறைமாட்சி 381-390 | Thirukkural, திருக்குறள் 381 - 390 |
Thirukkural, திருக்குறள் 381 - 390 :-
இறைமாட்சி |
|
381 |
படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் ஆறும் |
|
உடையான் அரசருள் ஏறு. |
|
|
382 |
அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் இந் நான்கும் |
|
எஞ்சாமை-வேந்தற்கு இயல்பு. |
|
|
383 |
தூங்காமை, கல்வி, துணிவுடைமை இம் மூன்றும் |
|
நீங்கா-நிலன் ஆள்பவற்கு. |
|
|
384 |
அறன் இழுக்காது, அல்லவை நீக்கி, மறன் இழுக்கா |
|
மானம் உடையது-அரசு. |
|
|
385 |
இயற்றலும், ஈட்டலும், காத்தலும், காத்த |
|
வகுத்தலும், வல்லது-அரசு. |
|
|
386 |
காட்சிக்கு எளியன், கடுஞ் சொல்லன் அல்லனேல், |
|
மீக்கூறும், மன்னன் நிலம். |
|
|
387 |
இன் சொலால் ஈத்து, அளிக்க வல்லாற்குத் தன் சொலால் |
|
தான் கண்டனைத்து, இவ் உலகு. |
|
|
388 |
முறை செய்து காப்பாற்றும் மன்னவன், ‘மக்கட்கு |
|
இறை’ என்று வைக்கப்படும். |
|
|
389 |
செவி கைப்பச் சொற் பொறுக்கும் பண்புடை வேந்தன் |
|
கவிகைக்கீழ்த் தங்கும், உலகு. |
|
|
390 |
கொடை, அளி, செங்கோல், குடி-ஓம்பல், நான்கும் |
|
உடையான் ஆம், வேந்தர்க்கு ஒளி. |