ஊழ் 371-380 | Thirukkural, திருக்குறள் 371 - 380 |
Thirukkural, திருக்குறள் 371 - 380 :-
ஊழ் |
|
371 |
ஆகு ஊழால் தோன்றும், அசைவு இன்மை; கைப்பொருள் |
|
போகு ஊழால் தோன்றும், மடி. |
|
|
372 |
பேதைப் படுக்கும், இழவு ஊழ்; அறிவு அகற்றும், |
|
ஆகல் ஊழ் உற்றக்கடை. |
|
|
373 |
நுண்ணிய நூல் பல கற்பினும், மற்றும் தன் |
|
உண்மை அறிவே மிகும். |
|
|
374 |
இரு வேறு, உலகத்து இயற்கை; திரு வேறு; |
|
தெள்ளியர் ஆதலும் வேறு. |
|
|
375 |
நல்லவை எல்லாஅம் தீய ஆம்; தீயவும் |
|
நல்ல ஆம்;-செல்வம் செயற்கு. |
|
|
376 |
பரியினும் ஆகாவாம், பால் அல்ல; உய்த்துச் |
|
சொரியினும் போகா, தம. |
|
|
377 |
வகுத்தான் வகுத்த வகை அல்லால், கோடி |
|
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. |
|
|
378 |
துறப்பார்மன், துப்புரவு இல்லார்-உறற்பால |
|
ஊட்டா கழியும் எனின். |
|
|
379 |
நன்று ஆம் கால் நல்லவாக் காண்பவர், அன்று ஆம் கால் |
|
அல்லற்படுவது எவன். |
|
|
380 |
ஊழின் பெருவலி யா உள-மற்று ஒன்று |
|
சூழினும், தான் முந்துறும். |