ஊழ் 371-380 | Thirukkural, திருக்குறள் 371 - 380 |
ஊழ் 371 - 380 திருக்குறள் 371 - 380
- ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி. - பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை. - நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும். - இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு. - நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு. - பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம. - வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. - துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின். - நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன். - ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்.