அவா அறுத்தல் 361-370 | Thirukkural, திருக்குறள் 361 - 370 |
Thirukkural, திருக்குறள் 361 - 370 :-
அவா அறுத்தல் |
|
361 |
'அவா' என்ப-'எல்லா உயிர்க்கும், எஞ் ஞான்றும், |
|
தவாஅப் பிறப்பு ஈனும் வித்து'. |
|
|
362 |
வேண்டுங்கால், வேண்டும் பிறவாமை; மற்று அது |
|
வேண்டாமை வேண்ட, வரும். |
|
|
363 |
வேண்டாமை அன்ன விழுச் செல்வம் ஈண்டு இல்லை; |
|
யாண்டும் அஃது ஒப்பது இல். |
|
|
364 |
தூஉய்மை என்பது அவா இன்மை; மற்று அது |
|
வா அய்மை வேண்ட, வரும். |
|
|
365 |
அற்றவர் என்பார் அவா அற்றார்; மற்றையார் |
|
அற்று ஆக அற்றது இலர். |
|
|
366 |
அஞ்சுவது ஓரும் அறனே; ஒருவனை |
|
வஞ்சிப்பது ஓரும் அவா. |
|
|
367 |
அவாவினை ஆற்ற அறுப்பின், தவா வினை |
|
தான்வேண்டும் ஆற்றான் வரும். |
|
|
368 |
அவா இல்லார்க்கு இல்லாகும் துன்பம்; அஃது உண்டேல், |
|
தவாஅது மேன்மேல் வரும். |
|
|
369 |
இன்பம் இடையறாது, ஈண்டும்-அவா என்னும் |
|
துன்பத்துள் துன்பம் கெடின். |
|
|
370 |
ஆரா இயற்கை அவா நீப்பின், அந் நிலையே |
|
பேரா இயற்கை தரும். |