மெய் உணர்தல் 351-360 | Thirukkural, திருக்குறள் 351 - 360 |
Thirukkural, திருக்குறள் 351 - 360 :-
மெய் உணர்தல் |
|
351 |
பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும் |
|
மருளான் ஆம், மாணாப் பிறப்பு. |
|
|
352 |
இருள் நீங்கி இன்பம் பயக்கும்-மருள் நீங்கி |
|
மாசு அறு காட்சியவர்க்கு. |
|
|
353 |
ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின் |
|
வானம் நணியது உடைத்து. |
|
|
354 |
ஐஉணர்வு எய்தியக் கண்ணும் பயம் இன்றே- |
|
மெய் உணர்வு இல்லாதவர்க்கு. |
|
|
355 |
எப் பொருள் எத் தன்மைத்துஆயினும், அப் பொருள் |
|
மெய்ப்பொருள் காண்பது அறிவு. |
|
|
356 |
கற்று ஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர், |
|
மற்று ஈண்டு வாரா நெறி. |
|
|
357 |
ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒரு தலையா, |
|
பேர்த்து உள்ளவேண்டா பிறப்பு. |
|
|
358 |
பிறப்பு என்னும் பேதைமை நீங்க, சிறப்பு என்னும் |
|
செம்பொருள் காண்பது அறிவு. |
|
|
359 |
சார்பு உணர்ந்து, சார்பு கெட ஒழுகின், மற்று அழித்துச் |
|
சார்தரா, சார்தரும் நோய். |
|
|
360 |
காமம், வெகுளி, மயக்கம், இவை மூன்றன் |
|
நாமம் கெட, கெடும் நோய். |