துறவு 341-350 | Thirukkural, திருக்குறள் 341 - 350 |
Thirukkural, திருக்குறள் 341 - 350 :-
துறவு |
|
341 |
யாதனின் யாதனின் நீங்கியான், நோதல் |
|
அதனின் அதனின் இலன். |
|
|
342 |
வேண்டின், உண்டாகத் துறக்க; துறந்தபின், |
|
ஈண்டு இயற்பால பல. |
|
|
343 |
அடல் வேண்டும், ஐந்தன் புலத்தை; விடல் வேண்டும், |
|
வேண்டிய எல்லாம் ஒருங்கு. |
|
|
344 |
இயல்பு ஆகும், நோன்பிற்கு ஒன்று இன்மை; உடைமை |
|
மயல் ஆகும், மற்றும் பெயர்த்து. |
|
|
345 |
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல்? பிறப்பு அறுக்கல் |
|
உற்றார்க்கு உடம்பும் மிகை. |
|
|
346 |
'யான்', ‘எனது’, என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு |
|
உயர்ந்த உலகம் புகும். |
|
|
347 |
பற்றி விடாஅ, இடும்பைகள்-பற்றினைப் |
|
பற்றி, விடாஅதவர்க்கு. |
|
|
348 |
தலைப்பட்டார், தீரத் துறந்தார்; மயங்கி |
|
வலைப்பட்டார், மற்றையவர். |
|
|
349 |
பற்று அற்றகண்ணே பிறப்பு அறுக்கும்; மற்றும் |
|
நிலையாமை காணப்படும். |
|
|
350 |
பற்றுக, பற்று அற்றான் பற்றினை! அப் பற்றைப் |
|
பற்றுக, பற்று விடற்கு!. |