நிலையாமை 331-340 | Thirukkural, திருக்குறள் 331 - 340 |
Thirukkural, திருக்குறள் 331 - 340 :-
நிலையாமை |
|
331 |
நில்லாதவற்றை நிலையின என்று உணரும் |
|
புல்லறிவு ஆண்மை கடை. |
|
|
332 |
கூத்தாட்டு அவைக்குழாத்தற்றே, பெருஞ் செல்வம்; |
|
போக்கும், அது விளிந்தற்று. |
|
|
333 |
அற்கா இயல்பிற்றுச் செல்வம்; அது பெற்றால், |
|
அற்குப ஆங்கே செயல். |
|
|
334 |
நாள் என ஒன்றுபோல் காட்டி, உயிர், ஈரும் |
|
வாளது-உணர்வார்ப் பெறின். |
|
|
335 |
நாச் செற்று, விக்குள் மேல்வாராமுன், நல் வினை |
|
மேற்சென்று செய்யப்படும். |
|
|
336 |
'நெருநல் உளன், ஒருவன்; இன்று இல்லை!' என்னும் |
|
பெருமை உடைத்து, இவ் உலகு. |
|
|
337 |
ஒரு பொழுதும் வாழ்வது அறியார், கருதுப- |
|
கோடியும் அல்ல, பல. |
|
|
338 |
குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்தற்றே- |
|
உடம்பொடு உயிரிடை நட்பு. |
|
|
339 |
உறங்குவது போலும், சாக்காடு; உறங்கி |
|
விழிப்பது போலும், பிறப்பு. |
|
|
340 |
புக்கில் அமைந்தின்றுகொல்லோ-உடம்பினுள் |
|
துச்சில் இருந்த உயிர்க்கு!. |