கொல்லாமை 321-330 | Thirukkural, திருக்குறள் 321 - 330 |
Thirukkural, திருக்குறள் 321 - 330 :-
கொல்லாமை |
|
321 |
'அறவினை யாது?' எனின், கொல்லாமை; கோறல் |
|
பிற வினை எல்லாம் தரும். |
|
|
322 |
பகுத்து உண்டு, பல் உயிர் ஓம்புதல் நூலோர் |
|
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. |
|
|
323 |
ஒன்றாக நல்லது கொல்லாமை; மற்று அதன் |
|
பின்சாரப் பொய்யாமை நன்று. |
|
|
324 |
'நல்லாறு எனப்படுவது யாது?' எனின், யாது ஒன்றும் |
|
கொல்லாமை சூழும் நெறி. |
|
|
325 |
நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம், கொலை அஞ்சிக் |
|
கொல்லாமை சூழ்வான், தலை. |
|
|
326 |
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல் |
|
செல்லாது, உயிர் உண்ணும் கூற்று. |
|
|
327 |
தன் உயிர் நீப்பினும் செய்யற்க-தான் பிறிது |
|
இன் உயிர் நீக்கும் வினை. |
|
|
328 |
நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும், சான்றோர்க்குக் |
|
கொன்று ஆகும் ஆக்கம் கடை. |
|
|
329 |
கொலை வினையர் ஆகிய மாக்கள் புலை வினையர், |
|
புன்மை தெரிவார் அகத்து. |
|
|
330 |
'உயிர் உடம்பின் நீக்கியார்' என்ப-'செயிர் உடம்பின் |
|
செல்லாத் தீ வாழ்க்கையவர்'. |