இன்னா செய்யாமை 311-320 | Thirukkural, திருக்குறள் 311 - 320 |
Thirukkural, திருக்குறள் 311 - 320 :-
இன்னா செய்யாமை |
|
311 |
சிறப்பு ஈனும் செல்வம் பெறினும், பிறர்க்கு இன்னா |
|
செய்யாமை மாசு அற்றார் கோள். |
|
|
312 |
கறுத்து இன்னா செய்த அக்கண்ணும், மறுத்து இன்னா |
|
செய்யாமை மாசு அற்றார் கோள். |
|
|
313 |
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின், |
|
உய்யா விழுமம் தரும். |
|
|
314 |
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண |
|
நல் நயம் செய்து, விடல். |
|
|
315 |
அறிவினான் ஆகுவது உண்டோ-பிறிதின் நோய் |
|
தம் நோய்போல் போற்றாக்கடை?. |
|
|
316 |
இன்னா எனத் தான் உணர்ந்தவை, துன்னாமை |
|
வேண்டும், பிறன்கண் செயல். |
|
|
317 |
எனைத்தானும், எஞ்ஞான்றும், யார்க்கும், மனத்தான் ஆம் |
|
மாணா செய்யாமை தலை. |
|
|
318 |
தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான், என்கொலோ, |
|
மன் உயிர்க்கு இன்னா செயல்?. |
|
|
319 |
பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின், தமக்கு இன்னா |
|
பிற்பகல் தாமே வரும். |
|
|
320 |
நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம்; நோய் செய்யார், |
|
நோய் இன்மை வேண்டுபவர். |