வெகுளாமை 301-310 | Thirukkural, திருக்குறள் 301 - 310 |
Thirukkural, திருக்குறள் 301 - 310 :-
வெகுளாமை |
|
301 |
செல் இடத்துக் காப்பான் சினம் காப்பான்; அல் இடத்து, |
|
காக்கின் என்? காவாக்கால் என்?. |
|
|
302 |
செல்லா இடத்துச் சினம் தீது; செல் இடத்தும், |
|
இல், அதனின் தீய பிற. |
|
|
303 |
மறத்தல், வெகுளியை யார்மாட்டும்-தீய |
|
பிறத்தல் அதனான் வரும். |
|
|
304 |
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் |
|
பகையும் உளவோ, பிற?. |
|
|
305 |
தன்னைத் தான் காக்கின், சினம் காக்க! காவாக்கால், |
|
தன்னையே கொல்லும், சினம். |
|
|
306 |
சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி இனம் என்னும் |
|
ஏமப் புணையைச் சுடும். |
|
|
307 |
சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு |
|
நிலத்து அறைந்தான் கை பிழையாதற்று. |
|
|
308 |
இணர் எரி தோய்வன்ன இன்னா செயினும், |
|
புணரின் வெகுளாமை நன்று. |
|
|
309 |
உள்ளிய எல்லாம் உடன் எய்தும்-உள்ளத்தால் |
|
உள்ளான் வெகுளி எனின். |
|
|
310 |
இறந்தார் இறந்தார் அனையர்; சினத்தைத் |
|
துறந்தார் துறந்தார் துணை. |