வாய்மை 291-300 | Thirukkural, திருக்குறள் 291 - 300 |
Thirukkural, திருக்குறள் 291 - 300 :-
வாய்மை |
|
291 |
'வாய்மை எனப்படுவது யாது?' எனின், யாது ஒன்றும் |
|
தீமை இலாத சொலல். |
|
|
292 |
பொய்ம்மையும் வாய்மை இடத்த-புரை தீர்ந்த |
|
நன்மை பயக்கும் எனின். |
|
|
293 |
தன் நெஞ்சு அறிவது பொய்யற்க; பொய்த்தபின், |
|
தன் நெஞ்சே தன்னைச் சுடும். |
|
|
294 |
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின், உலகத்தார் |
|
உள்ளத்துள் எல்லாம் உளன். |
|
|
295 |
மனத்தொடு வாய்மை மொழியின், தவத்தொடு |
|
தானம் செய்வாரின் தலை. |
|
|
296 |
பொய்யாமை அன்ன புகழ் இல்லை; எய்யாமை, |
|
எல்லா அறமும் தரும். |
|
|
297 |
பொய்யாமை பொய்யாமை ஆற்றின், அறம் பிற |
|
செய்யாமை செய்யாமை நன்று. |
|
|
298 |
புறம் தூய்மை நீரால் அமையும்;- அகம் தூய்மை |
|
வாய்மையால் காணப்படும். |
|
|
299 |
எல்லா விளக்கும் விளக்கு அல்ல; சான்றோர்க்குப் |
|
பொய்யா விளக்கே விளக்கு. |
|
|
300 |
யாம் மெய்யாக் கண்டவற்றுள், இல்லை-எனைத்து ஒன்றும் |
|
வாய்மையின் நல்ல பிற. |